என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஈரோட்டில் மஞ்சள் தேக்கம்
நீங்கள் தேடியது "ஈரோட்டில் மஞ்சள் தேக்கம்"
லாரிகள் ஸ்டிரைக் தீவிரமாக நடந்து வருவதால் ஈரோட்டில் மட்டும் சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள மஞ்சள்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கி கிடக்கிறது. #LorryStrike
ஈரோடு:
நாடு முழுவதும் இன்று 4-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.
ஈரோடு என்றதும் மஞ்சளும், ஜவுளிகளும் தான் நினைவுக்கு வரும். ஈரோடு மாவட்டம் முழுவதும் மஞ்சள் சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. அறுவடை செய்யப்படும். மஞ்சள் பதப்படுத்தப்பட்டு மூட்டைகளில் அடைத்து இந்தியா முழுவதும் தினமும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது லாரிகள் ஸ்டிரைக் தீவிரமாக நடந்து வருவதால் ஈரோட்டில் மட்டும் சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள மஞ்சள்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கி கிடக்கிறது. மஞ்சள் மூட்டைகள் குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதே போல் ஈரோட்டில் மட்டும் இன்று வரை ரூ.50 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம் அடைந்து உள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் ஜளிகள் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டு இங்கு இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் பல மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
லாரிகள் ஸ்டிரைக்கால் ஜவுளி பண்டல்கள் குவியல் குவியலாக தேங்கி கிடக்கிறது.
மேலும் ஈரோட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும். எண்ணெய் வித்துகள் ரூ.15 கோடி அளவிலும் மாட்டு தீவனம் ரூ.2 கோடி அளவிலும், காய்கறிகள் ரூ.5 கோடி அளவிலும் தேங்கி உள்ளது.
மொத்தம் ஈரோடு மாவட் டத்தில் மட்டும் இதுவரை ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு பொருட்கள் தேக்கம் அடைந்திருப்பதாக மஞ்சள் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜமாணிக்கம், தமிழ்நாடு வணிக சங்க பேரவை மாநில இணை செயலாளர் சிவநேசன் ஆகியோர் தெரிவித்தனர். #LorryStrike
நாடு முழுவதும் இன்று 4-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.
ஈரோடு என்றதும் மஞ்சளும், ஜவுளிகளும் தான் நினைவுக்கு வரும். ஈரோடு மாவட்டம் முழுவதும் மஞ்சள் சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. அறுவடை செய்யப்படும். மஞ்சள் பதப்படுத்தப்பட்டு மூட்டைகளில் அடைத்து இந்தியா முழுவதும் தினமும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது லாரிகள் ஸ்டிரைக் தீவிரமாக நடந்து வருவதால் ஈரோட்டில் மட்டும் சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள மஞ்சள்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கி கிடக்கிறது. மஞ்சள் மூட்டைகள் குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதே போல் ஈரோட்டில் மட்டும் இன்று வரை ரூ.50 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம் அடைந்து உள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் ஜளிகள் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டு இங்கு இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் பல மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
லாரிகள் ஸ்டிரைக்கால் ஜவுளி பண்டல்கள் குவியல் குவியலாக தேங்கி கிடக்கிறது.
மேலும் ஈரோட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும். எண்ணெய் வித்துகள் ரூ.15 கோடி அளவிலும் மாட்டு தீவனம் ரூ.2 கோடி அளவிலும், காய்கறிகள் ரூ.5 கோடி அளவிலும் தேங்கி உள்ளது.
மொத்தம் ஈரோடு மாவட் டத்தில் மட்டும் இதுவரை ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு பொருட்கள் தேக்கம் அடைந்திருப்பதாக மஞ்சள் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜமாணிக்கம், தமிழ்நாடு வணிக சங்க பேரவை மாநில இணை செயலாளர் சிவநேசன் ஆகியோர் தெரிவித்தனர். #LorryStrike
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X